Sunday, August 2, 2009

நீ வருவாயா


நீ வருவாயா?

ன் கனவுகளுடனும்
உறவாடினேன்
உன்
நினைவுகளுடனும்
உறவாடினேன்
ஆனால்
நிஜமாக உன்னோடு மட்டும்
உறவாட நீ வருவாயா?

காத்திருக்கிறேன் உனக்காக


காத்திருக்கிறேன் உனக்காக...!!!

பிறந்த வீட்டை விட்டு
புகுந்த வீட்டுக்கு விளக்கேற்ற - என்னை
கூட்டிச்செல்ல வா.......!

அண்ணன், தங்கை பாசம் விடுத்து
மனைவி பிள்ளை என்று - என்னுடன்
உறவு கொண்டாட வா......!

மூன்று முடிச்சிட்டு
தாலிக்கயிறு கட்டி - என்னை
தாய்மையாக்கிட வா...!

சிவப்பு நிறப் பொட்டிட்டு
மனைவி ஸ்தானம் கொடுத்து - என்னை
அழைத்துச் செல்ல வா.....!

அம்மா, அப்பா என்று
பிள்ளைகள் கூப்பிட - எமது
வம்சம் பெருக்கிட வா.....!

அனைத்து செல்வங்களும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்ந்திட - நான்
காத்திருக்கிறேன் உனக்காக ஓடி வா....!!!

COULDN'T UNDERSTAND

னக்கு இப்போதுஎன்மீது
காதல் இருக்கிறதா?
சந்தேகம் வருகிறது
எனக்கு!!!!!