Friday, April 9, 2010


Forever
It's been hours, Seems like days
Since you went away ...........
And all I do is check the screen to see if you are okey
You don't answer when I phone
Guess you wanna be left alone
So I'm sending you my heart, my soul
And this is what I'll say...............
வாழ்க்கை ஒரு சவால் ------சமாளி
வாழ்க்கை ஒரு வெகுமதி ---பெற்றுக்கொள்
வாழ்க்கை ஒரு சோகம் ------தாங்கிக்கொள்
வாழ்க்கை ஒரு கடமை ------நிறைவேற்று
வாழ்க்கை ஒரு போராட்டம் --துணிந்து நில்
வாழ்க்கை ஒரு விளையாட்டு --ஈடுபடு
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் -----எடுத்துக்கொள்
வாழ்க்கை ஒரு பயணம் --------நடந்துமுடி
வாழ்க்கை ஒரு சதித்திட்டம் --நிறைவேற்று
வாழ்க்கை ஒரு லட்சியம் ------அடைந்துவிடு

நான் உன்னை காதலிக்கிறேன்
--------------------------------------------
நீ அடையமுடியாத தூரம்தான் -இருந்தும்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ அளக்க முடியாத ஆழம்தான் -இருந்தும்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ அறியமுடியாத பொக்கிசம்தான்-இருந்தும்
நான் உன்னை காதலிக்கிறேன்

நாள்தோறும் உன்னை காதலிக்கிறேன் -உன்
நினைவாலே என்னை சாகடிக்கிறாய்
உனக்கும் -எனக்கும் தூரம்தான் -இருந்தும்
உறவு கொள்ளும் ஏக்கம்தான்

உன் தலை கோதி-உச்சி முகந்து -உன்
செவ்விதழை என்னிதழல் ஒருமுறை ஸ்பரிசித்து
என் நெஞ்சிலே நீ சாய உன்னை -நான்
அரவணைக்கும் சுகமே தனிதான்

ஆயிரம் எண்ணங்கள் அலைமோதி -அடங்க
உன்னை நான் தள்ளியிருந்து ரசிக்க
இவ்வாறு என் காதல் வெளிப்படுமே தவிர
என்றைக்கும் என் காதல் உனக்கு தெரியாது
காரணம்
என் காதலை உன்னிடம் சொல்லும்
தைரியம் எனக்கில்லை
but
அன்றைக்கும் -இன்றைக்கும் -எப்பொழுதும் -நான்
உன்னை காதலித்தேன் -காதலிக்கிறேன் -
காதலித்துக்கொண்டே இருப்பேன் .

Sunday, August 2, 2009

நீ வருவாயா


நீ வருவாயா?

ன் கனவுகளுடனும்
உறவாடினேன்
உன்
நினைவுகளுடனும்
உறவாடினேன்
ஆனால்
நிஜமாக உன்னோடு மட்டும்
உறவாட நீ வருவாயா?

காத்திருக்கிறேன் உனக்காக


காத்திருக்கிறேன் உனக்காக...!!!

பிறந்த வீட்டை விட்டு
புகுந்த வீட்டுக்கு விளக்கேற்ற - என்னை
கூட்டிச்செல்ல வா.......!

அண்ணன், தங்கை பாசம் விடுத்து
மனைவி பிள்ளை என்று - என்னுடன்
உறவு கொண்டாட வா......!

மூன்று முடிச்சிட்டு
தாலிக்கயிறு கட்டி - என்னை
தாய்மையாக்கிட வா...!

சிவப்பு நிறப் பொட்டிட்டு
மனைவி ஸ்தானம் கொடுத்து - என்னை
அழைத்துச் செல்ல வா.....!

அம்மா, அப்பா என்று
பிள்ளைகள் கூப்பிட - எமது
வம்சம் பெருக்கிட வா.....!

அனைத்து செல்வங்களும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்ந்திட - நான்
காத்திருக்கிறேன் உனக்காக ஓடி வா....!!!

COULDN'T UNDERSTAND

னக்கு இப்போதுஎன்மீது
காதல் இருக்கிறதா?
சந்தேகம் வருகிறது
எனக்கு!!!!!

Saturday, August 1, 2009